துளி செய்தி

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிவரும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மீது தாக்குதல்

 நத்தம் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து போராடியதால் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நத்தம் சிவசங்கரன் மீது கல்குவாரி உரிமையாளர்கள் ஒன்று கூடி தாக்கியுள்ளனர்.


நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராகவும், கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வரும் சூழலியல் போராளியாக அறியப்படுபவருமான நத்தம் சிவசங்கரன் என்பவர் மீது கல்குவாரி முதலாளிகள் ஒன்று கூடி, இன்று அவர் கட்சி அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



இதை கண்டித்து நத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்ந்த நபர்கள் போராட்டம் நடத்தினர் இணையதளங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தற்பொழுது காவல்துறை கல்குவாரி உரியமையாளர் கைது பண்ணாமல் போராடிய சிவசங்கரன் நாம் தமிழர் தம்பிகளை கைது செய்து உள்ளது காவல்துறை  இந்த நிகழ்வுவால் நாம் தமிழர் கட்சிக்குள் அதிர்ச்சியடைந்த 
உள்ளனர் இந்த செய்தி அந்த பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது