துளி செய்தி

35 பந்துகளில் சதம் விளாசிய சீமான் தம்பி கடாபி

பாரா சிட்டிங் கிரிக்கெட் அசோசியேஷன் இந்தியா அமைப்பு சார்பில் தென்னிந்திய அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான உட்கார்ந்து விளையாடும் டி10 கிரிக்கெட் போட்டி சென்னையில் நேற்று நடந்தது. 

அதில் தமிழ்நாடு-ஆந்திரபிரதேசம் அணிகள் மோதின. முதலில் களம் கண்ட

 தமிழ்நாடு 10ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 198ரன் குவித்தது. அந்த அணியின் கேப்டன் முகமது கடாபி 35 பந்துகளில் 116(23பவுண்டரி, 1சிக்சர்)ரன் விளாசினார். அடுத்து விளையாடிய ஆந்திரா 10ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 86ரன் எடுத்தது. அதனால் தமிழ்நாடு 112ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. களத்தில் அதிரடியாக காட்டும் கடாபி. இவர் நாம் தமிழர் கட்சி சார்ந்த மற்றுத் திறனாளிகள் பாசறை பொறுப்பாளர் அவர் இது தம்பி மத்தியில் பேசும் பொருளாக உள்ளது