துளி செய்தி

இசுலாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் திமுக-காங்கிரஸ் தான் பாதுகாப்பா..? சீமான் கேள்வி

உண்மையை உடைத்து பேசிய சீமான்

• பாதிக்கப்பட்ட,அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மக்களாக நாம் இருக்கும் காரணத்தினால்தான், மணிப்பூர்


மக்களின் வலியை உணர்ந்து பேசுகிறோம். பாலியல் வன்கொடுமைகள், வீட்டை இழப்பது, நிலத்தை இழப்பது,உறவுகளை இழப்பது என்றால் என்ன என்பது, நன்கு தெரிந்த காரணத்தினால்தான், எங்கோ ஓர் மூலையில் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்காக நாம் இங்குப் பேசுகிறோமே தவிர. மணிப்பூர் மக்கள் நமக்கு வாக்கு செலுத்துவார்கள் என்பதற்காக அல்ல!


• இசுலாமியார்களும், கிறித்தவர்களும் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக்கொண்டுள்ளோம்.ஆனால், அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாறி நீண்டகாலமாகி விட்டது. காரணம் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் தங்களிடம் இருக்கும் 18% வாக்கினை அப்படியே காங்கிரசு, திமுகவிற்குச் செலுத்தி நாட்டினை தெருவில் நிறுத்திவிட்டார்கள்.


• இந்த நாட்டில் சகிக்க முடியாத ஊழல், இலஞ்சம், சீர்கேடான நிர்வாகம் நடந்ததற்கு காரணம் காங்கிரசும்.திமுகவும்தான் அவர்கள்தான் தங்களைப் பாதுகாப்பார்கள். தங்களின் பாவங்களைத் தீர்ப்பார்கள் என்று நம்பி இசுலாமியர்களும், கிறித்தவர்களும் தங்களை முழுமையாக ஒப்புவிக்கிறார்கள். பெரும்பான்மையான பாவமே திமுகவும், காங்கிரசும்தான்.

• இசுலாமியர்களுக்கு திமுகதான் பாதுகாப்பா? இசுலாமிய சிறைவாசிகளை 20 ஆண்டுகளாக வெளியில்விடாமல் சிறைக்குள்ளேயே வைத்துப் பாதுகாப்பது என்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? மறுபடியும் திமுகவினர் இந்த தேர்தலின்போது வந்து, அப்பாவி சிறைவாசிகளை நாங்கள் விடுதலை செய்வோம் என்று இசுலாமியர் மக்களிடம் வாக்குக் கேட்பார்கள். நீங்கள் முதலில் விடுதலை செய்யுங்கள். அப்படி செய்துவிட்டால்

நாம் தமிழர் கட்சியினர்கூட உங்களுக்கே வாக்குச் செலுத்துகிறோம். ஆனால் நீங்கள் விடுதலை செய்யமாட்டீர்கள்.

• ஏழு தமிழர்களை விடுதலை செய்ய காங்கிரசுக்கு நீங்கள் பயந்தீர்கள். அப்பாவி இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய பாஜகவிற்குப் பயப்படுகிறீர்கள்.

• நாம் எதிர்த்து அழிக்க வேண்டியது பாரதிய ஜனதா கட்சி. காங்கிரசு மட்டுமல்ல என் உடன் பிறந்தார்களே! அவர்களைத் தொங்கு சதையாக, தோளில் தூக்கிச் சுமந்து,வீழ்த்த விடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுகவையும் சேர்த்து ஒழிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது.


- செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி